Categories: இந்தியா

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி!

Published by
கெளதம்

திரிணாமுல் காங்கிரஸ் : மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ரணகத் தக்ஷின், பாக்தா, ராய்கஞ்ச், மணிக்தலா ஆகிய 4 ட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது.

இன்று காலை 8 மணி முதல் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதன்படி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் தொகுதியில், கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் போட்டியாளரான மனாஸ் குமார் கோஷை வெற்றி பெற்றார். கல்யாணி 86,479 வாக்குகளும், கோஷ் 36,402 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தா சட்டமன்றத் தொகுதியில் டிஎம்சியின் ராஜ்யசபா எம்பியும், மட்டுவா தலைவருமான மம்தாபாலா தாக்கூரின் மகளும், டிஎம்சியின் மதுபர்ணா தாக்கூர், தனது போட்டியாளரான பாஜகவின் பினய் குமார் பிஸ்வாஸை விட 33,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுபர்ணா தாக்கூர் 1,07,706, பிஸ்வாஸ் 74,251 பெற்றனர்.

மேலும், பர்கானாஸில் உள்ள ரணகாட் தக்ஷினில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் பிஸ்வாஸை விட  டிஎம்சியின் முகுத் மணி அதிகாரி 39,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொல்கத்தாவில் உள்ள மணிக்தலா தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் சுப்தி பாண்டே, பாஜகவின் கல்யாண் சௌபேயை விட 31,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

6 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

7 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

11 hours ago