மேற்கு வங்க தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது.
அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும், காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 2 இடங்களும், மற்றவைகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்க நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை பெற்று வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சில சுற்றுகள் மட்டும் எண்ணப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து சுற்றுகளில் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…