திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தினேஷ் திரிவேதி பதவி விலகல்..!

Default Image

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி தினேஷ் திரிவேதி பதவி விளக்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் தீவிரம் வருகிறது. அதேநேரத்தில் பாஜகவும் ஆட்சியை பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் தனது பிரச்சாரத்தில் மம்தா கூறுகையில், நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டேன் என தெரிவித்தார். இந்நிலையில், மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறை காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தார். சமீபகாலமாக திரிணாமூல் காங்கிரஸில் இருந்து சிலர் விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்