திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஜாமீன் ரத்து எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
நாரதா வழக்கில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் பிர்காத் ஹக்கிம், சுப்ராதா முகர்ஜி, மதன் மித்ரா சோவன் சட்டர்ஜி ஆகிய 4 பேரை நாரதா வழக்கில் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் நேற்று முன்தினம் சிபிஐ விசாரணைக்கு அழைத்து 4 பேரையும் கைது செய்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்ததாக தகவல் வெளி வந்தவுடன் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்கு நேரடியாக சென்றார்.அங்கு சென்ற மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம்.
மேலும் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சிபிஐ அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார். பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், சிபிஐ நீதிமன்றத்தில் 4 தலைவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் உடனடியாக சிபிஐ கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமீன் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனால், 4 தலைவரும் சிபிஐ வசம் இருந்தன. இதை தொடர்ந்து நேற்று அதிகாலையில் சுப்ராதா முகர்ஜி, மதன் மித்ரா சோவன் சட்டர்ஜி ஆகிய மூன்று பேருக்கு அடுத்தது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அமைச்சர் பிர்காத் ஹக்கிம் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் ரத்து எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
பிர்காத் ஹக்கிம், சுப்ராதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகிய 3 பேரும் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதில், பிர்காத் ஹக்கிம், சுப்ராதா முகர்ஜி, அமைச்சராக பொறுப்பேற்று உள்ளனர். சோவன் சட்டர்ஜி கட்சியில் இருந்து விலகி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…