பாஜக பெயர் பதியப்பட்ட வாக்கு இயந்திரங்கள்.! திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

மேற்கு வங்கம்: வாக்கு இயந்திரத்தில் பாஜக பெயர் பதித்த குறிப்புத்தாள் கட்டப்பட்டு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்தனர். அதற்கு மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது .

நாடாளுமன்ற 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 மாநிலங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 8 தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஓர் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

இன்று, மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் ரகுநாத்பூர் பகுதி வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவுக்கு கொண்டுவரப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக பெயர் அதில் டேக் போல கட்டி வைக்கப்பட்டு இருந்தது என புகைப்படத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் பதிவிடுகையில், தேர்தல் பணியின் போது, வாக்கு இயந்திரத்தை சோதித்து பொதுவான ஓர் குறிச்சொற்களை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களால் கையொப்பமிட்டு வைப்பர். குறிப்பிட்ட வாக்கு இயந்திரங்களின் சோதனை நேரத்தில் பாஜக வேட்பாளரின் பிரதிநிதி மட்டுமே கமிஷன் ஹாலில் இருந்ததால், அந்த EVM மற்றும் VVPAT சோதிக்கும் போது அவரது கையெழுத்து பதிவாகியுள்ளது என மேற்கு வங்க தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

18 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

45 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago