இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் "நோ டு ஜெய்ஸ்ரீராம்" ஹேஸ்டேக்

Default Image

ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் என்று சொல்ல சொல்லி இஸ்லாமியர்கள் மீது கடும் தாக்குல் நடந்து வரும் சூழலில் நாங்கள் அதை சொல்ல மாட்டோம் என்ற விதத்தில் “நோ டு ஜெய்ஸ்ரீராம்” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தப்ரீஸ் அன்சாரி என்ற 25 வயது இஸ்லாமிய  இளைஞரை “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கம்பத்தில் கட்டி வைத்து  சில இந்து அமைப்புகள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியதில் அதிக காயத்துடன் ரத்தக்கறை படிந்த நிலையில் இருந்து வந்துள்ளார். கடந்த 18ம் தேதி செவ்வாய் கிழமை நடந்த தாக்குதலில் சனிக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவமானது நாட்டையே உலுக்கியுள்ளது.
மோடி இரண்டாவது முறையாக பதிவி ஏற்றதிலிருந்து இதுவரை இது போன்று 5 சம்பவங்கள் நடந்துள்ளது. இதே போல் கல்கத்தாவில் ஓடும் ரயிலில் இருந்து இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கீழே தள்ளி விடப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்