இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பயணிக்கும் நபர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் பயணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக சமீபத்தில் கொரோனா தொடர்பான பயண விதிகளை மாற்றியுள்ளது. அதில் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வருவதற்கு அனுமதித்துள்ளது. மேலும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்தியவர்களுக்கு அந்நாடு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து புதிய கொரோனா பயண விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில், இங்கிலாந்து, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி எடுத்தவர்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஃபைசர், மோடர்னா அல்லது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி (இங்கிலாந்திற்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாக பயணிகளுக்கு இறுதி டோஸ் இருக்க வேண்டும்) அல்லது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோஸ் ஆகியவை ஆகும். அதனால் இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தாமல் வேறு தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் தடுப்பூசி செலுத்தப்படாதவர்களாகவே கருதப்படுவர். அப்படி உள்ள இந்தியர்கள், இங்கிலாந்திற்கு செல்லும் முன் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அக்டோபர் 4 முதல், நாடுகளில் ஒரே சிவப்பு பட்டியல் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளின் பயணத்திற்கு, பயணிகளின் தடுப்பூசி நிலையைப் பொறுத்து பயண விதிகள் அமையும்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…