டெல்லி: மக்களவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது மாநில கட்சிகளிடம் தேசிய கட்சிகள் ஆதரவு கேட்கும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக நிதிஷ் குமார் (JDU), சந்திரபாபு நாயுடு (TDP) ஆகியோரின் ஆதரவை NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிகள் பெற முயற்சித்து வருகின்றன. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த சூழல் தான் இன்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் (I.N.D.I.A கூட்டணி) மற்றும் JDU தலைவர் நிதிஷ்குமார் (NDA கூட்டணி) ஆகியோர் ஒன்றாக பீகாரில் இருந்து விமானத்தில் பயணித்து டெல்லி வந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்விடம், I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்வியை செய்தியாளர்களிடம் கேட்டனர். அதற்கு. மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம். கொஞ்சம் பொறுமையாக இருந்து பாருங்கள் என கூறினார்.
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உடன் ஒரே விமானத்தில் ஒன்றாக பயணம் செய்யும் புகைப்படங்கள் வெளியானது குறித்த கேள்விக்கு , நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தினோம் என்று கூறினார். மேலும், அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தொடர்ந்து பாருங்கள் என கூறிவிட்டு சென்றார்.
I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…