“ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்” -ரயில்வே துறை அசத்தல் அறிவிப்பு!

Published by
Edison

டெல்லி:தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளிக்கும் இந்திய ரயில்வே துறையானது,தற்போது ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் கீழ் தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதற்கான உரிய வாடகைக் கட்டணங்களை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்த ரயில்களுக்கு ‘பாரத் கவுரவ் ரயில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால்,ரயில்களை எடுத்துச் செல்வதற்கு சில பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்,அதற்கு பதிலாக ரயில்வே குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,ரயில்களை வாடகைக்கு எடுக்க ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூபாய் 1 லட்சம் என்றும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த 1 கோடி ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என்றும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ்,தற்போது 180 பாரத் கவுரவ் ரயில்களை இயக்க மத்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.அந்த வகையில்,இதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணியை ரயில்வே துறை இன்று முதல் தொடங்கியுள்ளது,அவற்றிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

ரயில்வேயின் கூற்றுப்படி, பாரத் கௌரவ் ரயில்களை தனியார் துறை மற்றும் IRCTC இரண்டிலும் இயக்கலாம்.இது சுற்றுலா ஆபரேட்டரால் வசூலிக்கப்படும். இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை விளக்கும் கருப்பொருளின் அடிப்படையில் இந்த ரயில்கள் அமைக்கப்படும், பயணிகள்,சரக்கு போக்குவரத்துக்குப் பிறகு, சுற்றுலாவுக்காக ரயில்களின் மூன்றாவது பிரிவை மத்திய ரயில்வே தொடங்க உள்ளது.

திட்டத்தை அறிவித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பங்குதாரர்கள் இந்த ரயில்களை நவீனமயமாக்கி இயக்குவார்கள், அதே நேரத்தில் ரயில்வே துறை இந்த ரயில்களின் பராமரிப்பு, பார்க்கிங் மற்றும் பிற வசதிகளை வழங்கும் என்று கூறினார். இது வழக்கமான ரயில் சேவை போலவோ அல்லது பொதுவான ரயில் சேவையாகவோ இருக்காது என்றும் ‘பாரத் கௌரவ்’ ரயில்களின் முக்கிய குறிக்கோள் இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

5 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

18 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

29 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

36 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

51 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago