ஜூன் 30 வரை ரயில் சேவைகள் ரத்து .! ஜூலை வரை ஊரடங்கு நீட்டிப்பா..?

Published by
Dinasuvadu desk

ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது என மத்திய ரயில்வே அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 17-ம் தேதியுடன் முடிய இருந்த நிலையில, பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்திற்கு மே 31-வரை விமான சேவையும், ரயில் சேவையும் தொடங்க வேண்டாம் என்று  தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று மத்திய ரயில்வே அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியது. அதில், பயணிகள் ரயில்களின் இயக்கம் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக  தெரிவித்தது. இந்நிலையில், பிரதமர் மோடி, 5-வது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது,  4-ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என தெரிவித்தார். 

இதைதொடர்ந்து, தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது என  தெரிவித்துள்ளது. மேலும், வெளி மாநில தொழிலாளர்களுக்காக தற்போது இயக்கப்பட்டு வரும்” Sharmik  சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள்” தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ஜூன் 30-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிக்கப்படுமா..? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago