டெல்லி-கேரளா சிறப்பு ரயிலில் பயணித்த பயணிகள் 7 பேருக்கு கொரோனா அறிகுறி… மருத்துவமனைகளில் அனுமதி…

Published by
Kaliraj

 டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று கேரளா பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா சிறப்பு ரயில் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட்டு  நேற்று கேரளா வந்தது. இதில் பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  முழு ஊரடங்கின்  காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் சேவை கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து 900-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கேரளாவுக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்று அதிகாலை  திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. இந்த சிறப்பு ரயில்  கோழிக்கோடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே நிற்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 3 ரயில் நிலையங்களிலும் பயணிகளை பரிசோதிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி  ரயில்கோழிக்கோட்டை வந்தடைந்தது. இதில் 20 பேர் கொண்ட குழுக்களாக பயணிகளை இறக்கி, 10க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.

இதேபோல திருவனந்தபுரத்தில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Published by
Kaliraj

Recent Posts

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

51 minutes ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

3 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

3 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

4 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

6 hours ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

8 hours ago