ரயில், விமான சேவை மீண்டும் புத்துணர்ச்சி பெறுவது எப்போது?!

Default Image

ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், ரயில், விமான போக்குவரத்து சேவைகள் மறுதேதி அறிவிப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு மே 3ஆம் தேதி நிறைவடைவதை அடுத்து, மே 4ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை தொடங்க சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. தினமும் கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறுகையில், ‘  விமான போக்குவரத்தை எப்போது தொடங்கும் என மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அரசு முடிவு செய்த பிறகே டிக்கெட் முன்பதிவை தொடங்குங்கள்.’ என விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி விமான போக்குவரத்துக்கு எப்போது தொடங்கும் என தெளிவுபடுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்