மும்பை-புவனேஸ்வர் மார்க்கத்தில் செல்லும் லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் இன்று காலை கட்டாக்கில் உள்ள நெர்குண்டி ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இன்று காலை சரியாக காலை 7 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டு உள்ளது. சலாகான் மற்றும் நெர்குண்டி இடையே ஒரு சரக்கு ரெயில் மோதியதில் அதிவிரைவு ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும் அதே நேரத்தில் இந்த விபத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 5 பயணிகள் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை விரைந்துள்ளன. இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…