ரயிலில் சிக்கிய ஆடையால் நடந்த விபரீதம்..பரபரப்பான வீடியோ..!

Default Image

ரயில் கதவுகளுக்கு இடையில் சிக்கிய ஆடையால் நடைபாதையின் இறுதி வரை இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் பரபரப்பு வீடியோ.

கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மும்பை மெட்ரோ ரயிலின் கதவுகளுக்கு இடையே கௌரி குமாரி சாஹு என்ற பெண்ணின் (துப்பட்டா) ஆடையானது சிக்கிக்கொண்டது. அதனை கவனித்த பயணி ஒருவர் ஓட்டுனரின் அறையை தட்டியபோதும் அதை கவனிக்காமல் ரயில் புறப்பட்டது. ரயிலில் இருந்து தன்னை காப்பாற்ற முயற்ச்சித்தும் அந்த பெண்ணால் முடியவில்லை.

இதனால் ரயிலுடன் அந்த பெண்ணும் நடைபாதையின் இறுதி வரை இழுத்து செல்லப்பட்டார். இந்த சம்பவமானது மும்பை சகாலா (Chakala) ரயில்நிலையத்தில் நடந்துள்ளது. நடைமேடையின் கடைசி வரை இழுத்துச்செல்லப்பட்ட பெண் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அந்த பெண் குணமடைந்ததைத் தொடர்ந்து போலீசில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்