கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Published by
Rebekal

கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆண் நண்பர்.

கேரளாவில் உள்ள முவட்டுபுழா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 30 வயதான பல் மருத்துவர் சோனா. இவருக்கு திருமணம் ஆகியிருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே தனது கணவரை பிரிந்து விட்டார். இருப்பினும் தனது ஆண் நண்பர் மகேஷ் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் சேர்ந்து டென்டல் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். வருமானம் நல்லபடியாக வந்தது, கணவன் கேள்வி கேட்க இல்லை என்பதால் சோனாவிடம் நிறைய பண புழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷும் அந்த பணத்தை இஷ்டத்துக்கு வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.
சில காலங்கள் செல்ல நான் மகேஷிடம் ஏமாறுகிறேன் என்று உணர்ந்து இதுவரை கொடுத்த பணத்தை பற்றி மகேஷிடம் கேள்வி கேட்டுள்ளார் சோனா. அப்போது மகேஷ் பணத்தை கொடுக்க மறுத்துள்ளதுடன் தனது சுயரூபத்தைக் காட்டி உள்ளார். அதனை அடுத்து மகேஷ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் இனி சோனாவை உயிருடன் விட்டால் ஆபத்து என்று நினைத்து கடந்த 29ஆம் தேதி கிளினிக்குக்குள் சோனா வந்த பொழுது பல முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த சோனாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதன்பின் தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த போலீசார், மகேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago