தெலுங்கானாவில் திருமண நிகழ்ச்சியில் உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகனுக்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் காலா பட்டாரில் நடந்த இந்த சம்பவத்தில் 40 வயதான முகமது ரப்பானி என்ற நபர் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அப்பொழுது திருமணத்திற்கு முன்பாக நடைபெறும் மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்துக் கொண்டே மஞ்சள் பூசிக் கொண்டிருந்த முகமது ரப்பானி திடீரென மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் பிற உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் ரப்பானி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சந்தோஷம் நிறைந்த திருமண விழாவை சோகத்தில் ஆழ்த்தியது. ரப்பானி மணமகனுக்கு முன்னால் அமர்ந்து அவருக்கு மஞ்சள் பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…