திருமண நிகழ்ச்சியில் சோகம்..! மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த உறவினர்..!

Default Image

தெலுங்கானாவில் திருமண நிகழ்ச்சியில் உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகனுக்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் காலா பட்டாரில் நடந்த இந்த சம்பவத்தில் 40 வயதான முகமது ரப்பானி என்ற நபர் தனது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அப்பொழுது திருமணத்திற்கு முன்பாக நடைபெறும் மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்துக் கொண்டே மஞ்சள் பூசிக் கொண்டிருந்த முகமது ரப்பானி திடீரென மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் பிற உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் ரப்பானி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சந்தோஷம் நிறைந்த திருமண விழாவை சோகத்தில் ஆழ்த்தியது. ரப்பானி மணமகனுக்கு முன்னால் அமர்ந்து அவருக்கு மஞ்சள் பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்