CarcollidesJeep [Image Source : PTI]
மகாராஷ்டிராவில் கார் ஒன்று ஜீப் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி தாலுகாவில் கார் ஒன்று ஜீப் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் வாணியில் இருந்து சபுதாரா செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கோரி பாடா அருகே நடந்துள்ளது.
இதில் கார் சபுதாராவில் இருந்து வாணி நோக்கி சென்று கொண்டிருந்த போது ஜீப் மீது மோதியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நாசிக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…