மீண்டும் துயரம்.. ஜீப் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் பலி, 9 பேர் காயம்..!

CarcollidesJeep

மகாராஷ்டிராவில் கார் ஒன்று ஜீப் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி தாலுகாவில் கார் ஒன்று ஜீப் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் வாணியில் இருந்து சபுதாரா செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கோரி பாடா அருகே நடந்துள்ளது.

இதில் கார் சபுதாராவில் இருந்து வாணி நோக்கி சென்று கொண்டிருந்த போது ஜீப் மீது மோதியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நாசிக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்