கார்டாகவில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு.
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மாரியம்மனஹள்ளி கிராமத்தில் வீட்டில் உள்ள AC வெடித்து தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. AC வெடித்ததால் விஷ வாயு கசிந்தததா? அல்லது தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தார்கள் என்று போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஏசியில் இருந்து வாயு கசிந்ததால் தீ பரவி, மின்சார ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தியதால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி டி.சந்திரகலா (38), அவர்களின் மகன் ஆத்விக் (6) மற்றும் மகள் பிரேரனா (8) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இறந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஏதேனும் கடன்கள் இருந்ததா அல்லது குடும்பம் ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்ததா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…