“கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல;குற்றவாளிக்கு ஜாமீன்” – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published by
Edison

பாலியல் நோக்கம் இல்லாமல் பெண் குழந்தையின் கன்னங்களைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை,தானே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் முகமது அகமது உல்லா(வயது 46) என்பவர்,கடந்த ஆண்டு எட்டுவயது சிறுமியை தனது இறைச்சி கடைக்குள் அழைத்து சென்றுள்ளார்.அவர் சிறுமியை தனது கடைக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த ஒரு பெண், சந்தேகம் அடைந்து, பின்னர் அந்த இடத்திற்குச் சென்றதாகவும்,அப்போது,அங்கு முகமது உல்லா,சிறுமியின் கன்னத்தைத் தொட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து,மும்பைக்கு அருகில் தானே மாவட்டத்தில் உள்ள ரபோடி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் செய்தார்.

இதனையடுத்து,அவர்மீது FIR பதிவு செய்யப்பட்டு ஜூலை 2020 இல் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (பிபிசிஎஸ்ஓஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,உல்லா ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.அவர் தனது ஜாமீன் மனுவில், வியாபாரத்தில் தனது போட்டியாளர்களால் அவர் இந்த வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறினார்.தான் இதுவரை எந்த தவறும் செய்யவில்லை என்றும், இறைச்சி கடை நடத்தி வருவதாகவும், நீண்ட காலமாக அந்த பகுதியில் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில்,ஆகஸ்ட் 27 அன்று இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்தீப் ஷிண்டேயின் ஒற்றை அமர்வு, தானே பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி முகமது அகமது உல்லாவுக்கு ஜாமீன் வழங்கியது.

மேலும்,ஜாமீன் வழங்கியது குறித்து நீதிபதி கூறுகையில்:”என் பார்வையில், பாலியல் நோக்கம் இல்லாமல் கன்னங்களைத் தொடுவது ‘பாலியல் வன்கொடுமை’ குற்றத்தை ஈர்க்காது,இது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.மேலும்,குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்துடன் பாதிக்கப்பட்டவரின் கன்னங்களைத் தொட்டதாகக் கூறப்படவில்லை”,என்று கூறி ஜாமீன் வழங்கினார்.

எனினும்,ஜாமீன் வழங்கப்பட்டது என்பது விசாரணைகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தினார்.

Recent Posts

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…

59 minutes ago

“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…

2 hours ago

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

11 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

13 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

14 hours ago

SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…

14 hours ago