குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 31-ம் தேதி தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் அவர்களது புகாரை ஏற்காமல் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததால் அவரைத் திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் கூறினர்.
இந்நிலையில் ஜனவரி 5-ம் தேதி அதே கிராமத்தில் இளம்பெண் ஒரு ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இளம் பெண்ணின் உடலை மருத்துவ பரிசோதனை செய்ததில் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது தெரியவந்தது.
பின்னர் பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்ஷன், சதீஷ் ,பிமல் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கும்பல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
குற்றவாளிகள் நான்கு பேர் மீது வன்கொடுமை ,கொலை போன்ற பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…