டாப் 10 உலக கோடீஸ்வரர்கள் – ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி!

Published by
Edison

ஒவ்வொரு ஆண்டின் முடிவில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஹூரன் என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது,அதன்படி,2021 ஆம் ஆண்டிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரே இந்தியர்:

இந்நிலையில்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி,உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசை 2022-இல் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்று ஹூருன் ஆய்வு நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஆசியப் பணக்காரர் :

64 வயதான முகேஷ் அம்பானியின்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 24 சதவிகிதம் அதிகரித்து 103 பில்லியன் டாலர்களாக உயர்ந்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆசியப் பணக்காரர் என்ற பட்டத்தை அவர் தக்க வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு, சில்லறை மற்றும் எரிசக்தி வணிகத்தில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக,கடந்த ஆண்டு ரிலையன்ஸ் பங்குகள் முன்னதாக 22 சதவீதம் உயர்ந்தன என்று ஹுருன் இந்தியா ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

9-வது இடம்-ஒரே இந்தியர்:

இந்நிலையில்,முகேஷ் அம்பானி,சுமார் 7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசையில் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.இதன்மூலம்,டாப் 10 வரிசையில் இடம் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முதல் மூன்று இடங்கள்:

இதனிடையே,உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் CEO எலோன் மஸ்க், மற்றும் இரண்டாவது இடத்தில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மூன்றாவது இடத்தில LMVH CEO பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

4 hours ago