#Breaking : நாளை முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.!

Default Image

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை அந்தந்த ரயில்வே கவுண்டர்களில் நாளை முதல் வாங்கிக்கொள்ளலாம்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில்,  ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். 

இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. இல்லாத நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ரயில்களுக்காக ரயில்வே இணையதளத்தில் முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை அந்தந்த ரயில்வே கவுண்டர்களில் உரிய சமூக இடைவெளியுடன் நாளை முதல் வாங்கிக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த 200 ரயில்களில் தமிழகத்திற்கு எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்