#Tokyo2020: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் – பிரதமர் மோடி வாழ்த்து!!

Published by
பாலா கலியமூர்த்தி

நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு.

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனால், ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை இன்று வென்றுள்ளது. கடந்த 2008 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார்.

ஒலிம்பிக் முதல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவரது பதிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும். இளம் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் ஆர்வத்துடன் விளையாடி, இணையற்ற திறமையைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியா முதல் தங்கம் வென்றதை அனைவரும் கொண்டாடி, நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அப்டேட்டை குவிக்கும் ‘தளபதி 69’ படக்குழு.. லிஸ்ட் ரொம்ப நீளமா போகுது.!

அப்டேட்டை குவிக்கும் ‘தளபதி 69’ படக்குழு.. லிஸ்ட் ரொம்ப நீளமா போகுது.!

சென்னை : இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் "தளபதி 69" படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.…

2 hours ago

போராடி தோல்வியடைந்த ஸ்காட்லாந்து மகளிர் அணி! வங்கதேச மகளிர் அணிக்கு முதல் வெற்றி!

ஷார்ஜா : மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது இன்று கோலாகலமாக ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியாக வங்கதேச…

2 hours ago

சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் சுரேகா அவதூறு பேச்சு! வழக்கு தொடர்ந்த நாகர்ஜுனா?

சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.…

2 hours ago

இரண்டாவது பாகத்துக்கு விழுந்த அடி! இந்தியன் 3 குறித்து லைக்கா எடுத்த முடிவு?

சென்னை : இந்தியன் முதல் பாகம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் எப்போதும் இருக்கும் என்பதில் எந்த…

3 hours ago

தப்பிய விமானம்! ஜப்பானில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு!

மியாசகி : இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மீது வலுவான விமானப்படை இருந்தும் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனால், ஜப்பான்…

3 hours ago

மேடை இடிந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்!

தெலுங்கானா : தெலுங்கானா மாநிலம் தோரூரில் நடந்த ஷாப்பிங் மால் திறப்பு விழாவின் போது, திடீரென மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்…

4 hours ago