ரூ.540 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கழிவறைகளை காணவில்லை.! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.540 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படும் கழிப்பறைகள், உண்மையில் கட்டப்படாத என சோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.540 கோடி நிதி வழங்கியதை அடுத்து, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பின்னர் 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இதற்கான புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்ததுடன், பயனாளர்களுக்கு தலா ரூ.12,000 கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கட்டப்பட்ட கழிவறைகளை பார்ப்பதற்காக வந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கழிவறைகளை கட்டியதாக கணக்கு காட்டி, கட்டப்படாத கழிவறைக்கு செலவு செய்யப்பட்டதாக பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, அந்த பணத்தை வேறு ஒரு பயன்பாட்டுக்குச் செலவழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பியது தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடுத்தடுத்து புகார் எழுந்ததால் தீவிர விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து 7 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் கழிவறைகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதா என தெரிந்துகொள்ள 2,000 தன்னார்வலர்களை வைத்து சோதனை நடத்திய பிறகுதான் தெரியவந்தது என தூய்மை இந்தியா திட்டத்தின் மத்தியப்பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி தெரிவித்தார். மேலும்  மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசுகள் கொண்டு வந்தாலும், அது நேர்மையற்ற அதிகாரிகளால் ஊழலும், மோசடியும் நடந்து வருகிறது, இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

10 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

11 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

12 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

12 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

13 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

15 hours ago