ரூ.540 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கழிவறைகளை காணவில்லை.! அரசு அதிகாரிகள் அதிர்ச்சி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.540 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாக கூறப்படும் கழிப்பறைகள், உண்மையில் கட்டப்படாத என சோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கழிவறைகள் இல்லாத 62 லட்சத்துக்கும் மேற்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ.540 கோடி நிதி வழங்கியதை அடுத்து, பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பின்னர் 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், இதற்கான புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்ததுடன், பயனாளர்களுக்கு தலா ரூ.12,000 கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கட்டப்பட்ட கழிவறைகளை பார்ப்பதற்காக வந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கழிவறைகளை கட்டியதாக கணக்கு காட்டி, கட்டப்படாத கழிவறைக்கு செலவு செய்யப்பட்டதாக பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, அந்த பணத்தை வேறு ஒரு பயன்பாட்டுக்குச் செலவழிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பியது தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அடுத்தடுத்து புகார் எழுந்ததால் தீவிர விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஒருவரை கைது செய்து, அவரிடமிருந்து 7 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் கழிவறைகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டதா என தெரிந்துகொள்ள 2,000 தன்னார்வலர்களை வைத்து சோதனை நடத்திய பிறகுதான் தெரியவந்தது என தூய்மை இந்தியா திட்டத்தின் மத்தியப்பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி தெரிவித்தார். மேலும்  மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அரசுகள் கொண்டு வந்தாலும், அது நேர்மையற்ற அதிகாரிகளால் ஊழலும், மோசடியும் நடந்து வருகிறது, இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு : தவெக, நாதக உட்பட 45 கட்சிகளின் விவரம் இதோ…

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

38 minutes ago

விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!

சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…

1 hour ago

LIVE : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா முதல்… பாஜக அலுவலக திறப்பு விழா வரை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…

2 hours ago

விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!

சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…

3 hours ago

ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் விஜய் மகன் பங்கேற்பு! சால்வை, மாலை அணிவித்து கெளரவம்….

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…

3 hours ago

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா.! முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியீடு!!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…

4 hours ago