குட்டியானைகளின் நிலை:
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளை, பிற யானை கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இணைக்க இயலாவிட்டால் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு வனத்துறை பதிலளித்துள்ளது.
முதலமைச்சர் கடிதம் :
தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Readmore : மீனவர்கள் பிரச்சனை.. பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
குமரி கடலில் குளிக்கத் தடை:
கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலில் குளிப்பவர்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
விண்வெளி தொழில் பூங்கா:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் செயற்கைக்கோள் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்கா, விண்வெளி எரிபொருள் பூங்காக்களை அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
டெல்லி கலால் கொள்கை வழக்கு:
டெல்லி கலால் கொள்கை வழக்கில் நடந்து வரும் விசாரணை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளையை மார்ச் 13 வரை அமலாக்க இயக்குநரகம் (ED) காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் பதவியேற்பு :
நாகாலாந்து அமைச்சரவையில் ஜி கைடோ அயே, ஜேக்கப் ஜிமோமி, கேஜி கென்யே, பி பைவாங் கொன்யாக், மெட்சுபோ ஜமீர், டெம்ஜென் இம்னா அலோங், சிஎல் ஜான், சல்ஹுதுவோனுவோ க்ரூஸ் மற்றும் பி பாஷாங்மோங்பா சாங் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நாகாலாந்து முதல்வராக பதவியேற்பு :
நாகாலாந்து மாநில முதல்வராக பதவியேற்ற நெய்பியு ரியோவிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
Readmore : நாகாலாந்து முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்பு.!
3 யானைகள் பலி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் மின்சார வேலியை கடக்க முயன்ற மூன்று யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. சட்டவிரோதமாக மின் வேலி அமைத்த நபர் கைது செயப்பட்டுள்ளதாக தருமபுரி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Readmore : 3 யானைகள் பலி.! சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை.!
அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகி:
பாஜகவின் மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
Readmore : அதிமுகவில் இணைந்தார் பாஜக முன்னாள் நிர்வாகி திலிப் கண்ணன்!
ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை :
உத்தர பிரதேசத்தில் கடந்த 6 வருடங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் கொண்டுள்ளார். முன்பு கடன்காரர்களையே நம்பியிருந்த விவசாயிகள், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின் அவரின் திட்டங்களால் பயனடையும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்று கூறினார்.
மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா பதவியேற்பு :
மேகாலயா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கான்ராட் சங்மா, புதிய அரசின் பதவியேற்பு விழாவிற்கு ராஜ்பவனுக்குச் செல்வதற்கு முன், அனைத்து கேபினட் அமைச்சர்களுடன் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கலைவாணர் மாளிகை திறப்பு:
நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடமான கலைவாணர் மாளிகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…