இன்று பிரதமர் மோடி கான்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்..!

Default Image

உத்தரபிரதேசத்தில் கான்பூர் மெட்ரோ ரயில், பினா – பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் ஆகிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கான்பூர் செல்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு இன்று செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை மதியம் 1:30 மணியளவில் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் போது, ​​பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். முன்னதாக, காலை 11 மணியளவில் ஐஐடி கான்பூரின் 54-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் பார்வையிட்டு, ஐஐடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீதா நகர் வரை மெட்ரோ பயணம் மேற்கொள்கிறார். கான்பூரில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு நீளம் 32 கி.மீ., 11,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பினா சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கான்பூரில் உள்ள பங்கி வரையிலான இந்த திட்டம் ரூ.1500 கோடிக்கு மேல் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்ல உதவும்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்