இன்று தேசிய டெங்கு தினம்.! விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

National Dengue Day

இன்று (மே-16) தேசிய டெங்கு தினம் என்பதால் அதற்கான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த சிறு குறிப்பில் பார்க்கலாம். 

ஆண்டுதோறும் மே 16ஆம் தேதி தேசிய டெங்கு தினமானது அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது டெங்கு காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறது.

டெங்கு காய்ச்சலானது கொசுக்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. டெங்குவின் பொதுவான அறிகுறிகளாக அதிக காய்ச்சல், தலைவலி, ஒவ்வாமை, உடல்வலி ஆகியவை ஏற்படும்.

இந்த டெங்குவானது சரியாக கவனிக்கப்படாமல் இருந்துவிட்டால், சில சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் கூட நேரிடும். ஆகவே, மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால், டெங்கு காய்ச்சலுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

டெங்குவை தடுக்க சில பயனுள்ள குறிப்புகள் மருத்துவத்துறை மூலம் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை,

நீங்கள் வெளியில் செல்லும் போதெல்லாம் முழு கை, முழு பேன்ட் மற்றும் ஷூக்களை அணியுங்கள். செருப்புகளை அணிவதைத் தவிர்க்கவும். இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை உடுத்த வேண்டும்.

கொசுக்கடியை தவிர்க்க, லோஷன்களைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ள முறையாகும். ஆனால், உங்கள் தோலின் தன்மை, லோஷன்களின் செறிவு ஆகியவை அறிந்து பயன்பாடுத்த வேண்டும். ஏனெனில் சில நபர்களுக்கு லோஷன் ஒத்துக்கொள்ளாமல் தோலில் எதிர்வினையை ஏற்படுத்த கூடும்.

சுத்தம் செய்யும் போது கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்க அதற்கான உரிய பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும். இது பெரும்பாலும் கொசுக்கள் நமது வீடுகளுக்கு நுழைவதை தடுக்க முடியும். மேலும், தரையை துடைக்கும் முன் தண்ணீரில் ஒரு துளி எலுமிச்சை இவை கொசுக்களைத் தடுக்கின்றன.

எலுமிச்சை கொசு விரட்டிகளில் மிகவும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். 12 மணி நேரம் வரை, எலுமிச்சை கொசுக்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எலுமிச்சை இருமல் மற்றும் ஒவ்வாமை போன்ற சளி தொடர்பான அறிகுறிகளை சரி செய்கிறது.

ஒரு பழைய பானை செடி, மழை வடிகால் அல்லது வேறு எந்த தேங்கி நிற்கும் நீர் பகுதியிலும் குறைந்த அளவு தண்ணீரில் கொசுக்கள் 14 நாட்களில் முட்டையிடும். உங்களிடம் குளம் இருந்தால், கொசுக்களை உட்கொள்ளும் மீன்கள், நீரை நகர்த்துவதற்கு ஒரு அடுக்கு அல்லது நீரூற்று அல்லது நீரை கிருமி நீக்கம் செய்ய பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தலாம். கொசு லார்வாக்கள் பாக்டீரியாவால் கொல்லப்படுகின்றன.

கொசுக்கள் தீவிரமாக இயங்கும் வேளைகளின் போது வெளியில் இருப்பதை தவிர்ப்பது நல்லது. அந்த குறிப்பிட்ட மணிநேரங்களில் நீங்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க முடியாவிட்டால், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளியில் செல்லலாம். மாலை மற்றும் விடியற்காலையில் கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

கொசுக்கள் ஜன்னல் வழியாக நுழைவதைத் தடுக்க ஜன்னல் திரைகளை பயன்படுத்த வேண்டும். இருப்பினும், உங்களிடம் திரைகள் இல்லையென்றால், உங்கள் படுக்கையை மறைக்க மட்டுமாவது ஒரு சிறந்த கொசு வலையை வாங்க வேண்டும்.

மேற்கொண்ட செயல்முறைகளை மேற்கொண்டு கொசுக்களிடம் இருந்து நம்மையும், நம் குடும்பத்தாரையும் டெங்கு போன்ற காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu
IND vs PAK
dragon movie box office
kaliyammal seeman