நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், இன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.
ஒவ்வொரு வருடமும் மே மாதங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் காரணமாக கடந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது போலவே, இந்த ஆண்டும் சற்று தாமதமாக நீட் தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்க உள்ளது. இதுவரை 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிப்பதிவு https://ntaneet.nic.in/ எனும் இணையதளத்தில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விண்ணப்பப்பதிவு ஏற்கனவே கடந்த 6-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீடிக்கப்பட்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பப்பதிவு செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள். நீட் தேர்வு எழுத விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…