ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்று மாலை ஹரியானா மாநிலத்தில் நிறைவு பெற்று நாளை தலைநகர் டெல்லியில் தொடங்க உள்ளது.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் செல்லும் தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். 100 நாட்களை கடந்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.
கடந்த புதன்கிழமை அன்று ராஜஸ்தானில் இருந்து ஹரியானா சென்ற ராகுல் காந்தி இன்று ஹரியானாவில் உள்ள சோஹ்னா, கெர்லி லாலாவிலில் தனது யாத்திரையை தொடங்கினார்.
ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் இந்த ஒற்றுமையாத்திரையில் கலந்து கொண்டனர். இன்று ஹரியானாவில் முடியும் யாத்திரை, நாளை தலைநகர் டெல்லியில் தொடங்க உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரசார் தயாராகி வருகின்றனர்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…