இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 89-ஆவது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ராமேஸ்வரத்தை பூர்விகமாக கொண்ட டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை படைத்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் கலாமின் புகழ் பரவ தொடங்கியது.
காலம் அவர்களின் சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து 2002-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நாட்டின் 11-வது ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றார்.
இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று போற்றப்படும் இவர், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் நாள் அவரின் உயிர் பிரிந்தது. கலாமின் மறைவிற்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, 2011-ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என கலாமின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…