இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குபதிவு நடைபெறுகிறது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
பீகாரில்71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குபதிவில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.முதற்கட்ட வாக்கு பதிவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் அமைச்சரவையின் 6 அமைச்சர்களின் எதிர்கால அரசியல் நிர்ணக்கப்படுகிறது.
பீகாரில் 3 கட்டங்களாக வாக்கு பதிவு நடைபெறுவதால் பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசு 30,000 மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்துள்ளது.மேலும் மாவோயிஸ்டுகள் அதிக நடமாட்டமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் முக கவசங்கள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் சுமார் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடக்கத்தது. மேலும் 80 வயது கடந்த பீகார் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தபால் ஓட்டு மூலம் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…