ஊரடங்கிற்கு திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ. 1.02 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஜூன் 11 முதல் ஆந்திராவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12,000க்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கிற்கு பின் முதல்முறையாக திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் வருமானம் கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று திருமலையானை தரிசிக்க 13,486 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அதனையடுத்து அவர்கள் தானம் செய்தது ஞாயிற்றுக்கிழமை கணக்கிடப்பட்டதாகவும், அதில் உண்டி வருமானமாக ரூ. 1.02 கோடி கிடைத்ததாகவும், ஊரடங்கிற்கு பின்னர் 1 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது இதுவே முதல்முறை என்றும் TTD தெரிவித்துள்ளது.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…