ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட திருப்பதி கோவில்! ரூ.400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு!

Published by
லீனா

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட திருப்பதி கோவிலுக்கு ரூ.400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், இந்தியா முழுவதும் உள்ள வழிபாட்டு தளங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது தான் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மக்கள் அதிகமாக கூடுகிற வழிபாட்டு தலங்களில் ஒன்று திருப்பதி. இந்த கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மக்கள் வந்து போவதுண்டு. எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் திருப்பதி கோவில், தற்போது ஊரடங்கு உத்தரவால் வெறிசோடி காணப்படுகிறது. 

 ஒரு ஆண்டிற்கு தேவஸ்தானத்தின் செலவு ரூ.2500 கோடி. ஒவ்வொரு ஆண்டும், அங்கு பணி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.1300 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது. மேலும், வங்கிகளில் 8 டன் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி கோவில் பல கோடி வருவாயுடன் இயங்கி வருகிற நிலையில், தற்போது இந்த ஊரடங்கு காரணமாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால், ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருவாய் இழப்பு காரணமாக ஏற்பட்டுள்ள நிதி சுமையை சமாளிக்க பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களிடமும், தேவஸ்தான தொடர்புடைய கல்வி நிறுவனங்களிடமும் இருந்து நிதியை பெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago