Kerala - BombBlast [File Image]
கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ என கேரள போலீசார் உறுதிசெய்துள்ளனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்ததாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேசிய கேரள மாநில டிஜிபி, இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கேரள எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி வனப்பகுதிகளிலும் காவல்துறையினர், வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வரை தொடர்புகொண்ட அமித்ஷா
குண்டு வெடிப்பை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்துள்ளார். வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்த பின், ஒன்றிய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG (தேசிய புலனாய்வு முகமை), NIA (தேசிய பாதுகாப்பு படை) ஆகியவையும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்த அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
தீவிர விசாரணை
இந்நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக கேரளா முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குண்டு வெடித்த இடத்தில் NIA சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த அரங்கத்திற்கு சீல் வைத்த NIA அதிகாரிகள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வறுகின்றனர்.
சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை
இதற்கிடையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகாணி, எருமாடு, கனநல்லா உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…