அமைச்சர் சஞ்சய் ரத்தோட் மீது புகார் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் நகரிலிருந்து புனேவுக்கு படிப்பிற்காக வந்த டிக்-டாக்கில் பிரபலமான இளம்பெண் பூஜா சவான் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் மரணத்திற்கும், சிவசேனாவை சேர்ந்த வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோடுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த விவகாரத்தில் சஞ்சய் ரதோட் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. ஆனால், சஞ்சய் ரதோட் கூறுகையில், இளம்பெண்ணின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது என கூறினார்.
பா.ஜ.க. தொடர்ந்து இந்த விவகாரத்தில் நெருக்கடி அளித்து வந்த நிலையில் ரதோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியர்களிடம் கூறுகையில், தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியதாக கூறினார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…
தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…