மனைவியை கொலை செய்து டிபன் பாக்ஸில் அடைத்த கணவன் ! ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

Published by
kavitha

தனது மனைவியை கொலை செய்த உடலை 300 துண்டுகளாக நறுக்கி டிபன் பாக்ஸில் மறைத்து வைத்திருந்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணியற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் சோம்நாத் பரிதா என்பவர் தான் கடந்த 2013ம்ஆண்டு தனது மனைவி உஷாஸ்ரீ சமலை கொலை செய்தார்.கொலையை மறைப்பதற்காக அவரது மனைவியினுடைய உடலை 300 துண்டுகளாக பிஷ்பிஷாக நறுக்கி 22 சின்ன டிபன் பாக்ஸ்களி அடைத்து அதை அவரது வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார்.
மேலும் நறுக்கிய உடலில் இருந்து துர்நாற்றம் வீசாமால் இருப்பதற்காக பினாயிலையும் ஊற்றி உள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் உபகரணங்கள்,கத்திரிக்கோல், கத்தி,  மூலமாக மனைவியினுடைய உடலை 300 துண்டுகளாகவும் நறுக்கி உள்ளார் என்ற விசாரனையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட உஷாஸ்ரீ சமலின் குழந்தைகள் வெளிநாட்டிலிருந்து பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை இதனால் உஷாஸ்ரீ சமலின் சகோதரர் ரஞ்சனுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து உஷாஸ்ரீ வீட்டிற்கு அவருடைய சகோதரர் ரஞ்சன் சென்ற போது தான் உஷாஸ்ரீ கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.இக்கொலை தொடர்பாக அவருடைய கணவர் சோம்நாத் பரிதா கைது செய்யப்பட்டார் மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கானது சுமார் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  குர்தா மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கியது. அதில் 78 வயதான பரிதாவிற்கு கொலை மற்றும் ஆதாரத்தை அழித்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் ஆயுள்தண்டனையும் மற்றும் 50,000ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

4 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

35 minutes ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

1 hour ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

9 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

10 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

11 hours ago