கும்ப மேளா நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் – தெலுங்கானா சுகாதாரத்துறை

Published by
லீனா

கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை கும்பமேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து  லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய நிலையில், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

இந்நிலையில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் 14 நாட்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெலுங்கானா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்ட 1,700 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில், இதுவரை, 3.79 லட்சத்திற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,928 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

ஆர்சிபி சிறந்த அணி தான் ஆனா நாங்க…வருண் சக்கரவர்த்தி ஃபயர் ஸ்பீச்!

கொல்கத்தா : 18 வது சீசனுக்கான  ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …

3 hours ago

பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…

3 hours ago

குறுக்க இந்த மழை கௌசிக் வந்தா? அபாயத்தில் முதல் ஐபிஎல் போட்டி? ஆரஞ்சு அலர்ட்!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…

4 hours ago

ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி  முதல் தொடங்கிய நிலையில், வரும்  ஏப்ரல் 6-ஆம் தேதி…

4 hours ago

ஐபிஎல் 2025 : சென்னை போட்டிக்கு டிக்கெட் வாங்குங்க…மெட்ரோவில் ஃபிரியா பயணம் பண்ணுங்க!

சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…

5 hours ago

இதுதான் அரசியல்., திமுக அழைப்பிற்கு பவன் கல்யாண் ஆதரவு! நாளை வருகை..,

சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…

5 hours ago