பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, “எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, இன்று, 71 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில், பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று காலத்திலும் வளர்ச்சையை உறுதிப்படுத்தியுள்ளோம் விரைவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றி வருவதாகவும், எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…