“எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர்”- பிரதமர் மோடி உரை!

Default Image

பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, “எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, இன்று, 71 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மொத்தமாக 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று காலத்திலும் வளர்ச்சையை உறுதிப்படுத்தியுள்ளோம் விரைவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என கூறினார்.

மேலும் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றி வருவதாகவும், எங்களை நோக்கி கேள்வி எழுப்பியவர்கள் இப்போது அமைதியாக உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்