இது என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்! ஜனவரி-30ல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அண்ணா ஹசாரே…!

Published by
லீனா

எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இது எனது கடைசி போராட்டமாக இருக்கும்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் பெரிய அளவில் கலவரங்கள் வெடித்ததில் காவல்துறையினர் காயமடைந்தனர். மேலும் இதில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து, அண்ணா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஜனவரி 30 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஜனவரி 30-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தனது ஆதரவாளர்கள் அந்தந்த இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயிகள் தொடர்பான தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும், இது தனது கடைசி எதிர்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசாங்கம் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே தருகிறது. இதன் காரணமாக எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம்.  அவர்கள் ஒரு மாதத்திற்கு நேரம் கோரியுள்ளனர், எனவே ஜனவரி இறுதி வரை அவர்களுக்கு நேரம் கொடுத்துள்ளேன். எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இது எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

1 hour ago

“தென்தமிழகத்தை நோக்கி மிதமான மழை பெய்யக்கூடும்” – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

2 hours ago

நேருக்கு நேராக சிங்கத்தை பார்த்த பிரதமர் மோடி! சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு!

குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…

2 hours ago

“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…

2 hours ago

ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…

3 hours ago

12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…

4 hours ago