14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும்.
நாடு முழுவதும் நான்காவது கட்ட பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு விமான சேவைக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், விமான நிலையத்திற்குள் வரும்போது உடல் வெப்ப நிலையை அளவிடும் தெர்மல் ஸ்கிரீனிங் பகுதி வழியாக பயணிகள் வர வேண்டும் என்றும் பயண நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 4 மணி நேரத்திற்கு பயணிக்க இருப்பவர்கள் மட்டுமே விமான நிலைய முனையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…