தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ. 250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில், அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவன்தின் கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளை ஒப்புதல் வழங்கப்பட்டு, முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. தற்பொழுது இரண்டாம் கட்டமாக, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், உடல்நிலை சரியில்லாத 45 வயதை கடந்தோருக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை, அரசு மையங்களுடன் இணைந்து தனியார் மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு, கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை ரூ. 250-க்கும், கோவாக்சின் தடுப்பூசியை ரூ.295-க்கும் விற்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…