ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் தருணம் இது – பிரதமர் மோடி நெகிழ்ச்சி !

Default Image

சந்திராயன் – 2 விண்கலம் விண்ணில் ஏற்றப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி “ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் தருணம்” என்று கூறி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்…

இது தொடர்பாக ட்விட்டரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பாதிவிட்டுள்ளார். அதில்,நிலவின்  தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய  உள்ள சந்திராயன் – 2 தனித்தன்மை வாய்ந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போது அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்களுகளை சந்திராயன் –  2 விண்கலம் வெற்றி ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார். சந்திராயன் –  2 விண்கல ஆய்வின் மூலம்  நிலவு பற்றிய புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்