மகாராஷ்டிராவில் பாஜக பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் முன் பதவி பதவியேற்றனர். பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்க உள்ளது. பாஜக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றும் அனைத்தும் எம்எல்ஏக்களும் எங்களிடம் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது. இந்நிலையில் நேற்று சிவசேனா , காங்கிரஸ்மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து மும்பையில் ஒரு ஹோட்டலில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் “மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி கர்நாடகா , கோவா , மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி பிடித்திருக்கிறது.
சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது 162 எம்எல்ஏக்களை விட அதிகமாக ஆதரவு எங்களிடம் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்ட முடியும் .”முறைகேடுகள் நடந்த இது கோவா இல்லை மகாராஷ்டிரா” என தெரிவித்தார். மேலும் கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என மூன்று கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் ஒருசேர உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…