அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் நேரடியாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அதிபர் டெனால்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இந்தியா வரவுள்ள டிரம்பிற்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப்பின் தீவிர ரசிகர் ஒருவர் தான் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜங்கனோன் நகரத்தை சேர்ந்த புஷா கிருஷ்ணா என்பவர் டிரம்ப்பின் தீவிர ரசிகர், இவர் டிரம்ப்பிற்க்காக சுமார் 6 அடி உயரமுள்ள சிலை ஒன்று அமைத்து அதற்கு தினமும் பால் அபிஷேகம், பூஜை என பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றார்.
இதுகுறித்து தெரிவித்த அவர் ட்ரம்ப் எனக்கு கடவுள் போன்றவர் அவருக்கு சிலை அமைக்க ஒரு மாதம் ஆனது என்றும், டிரம்ப் நீண்ட காலம் வாழ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து வருகின்றேன். பின்னர் தினமும் வேலையை துவங்கும் முன் டிரம்ப் படத்திற்கு பூஜை செய்து அவரை வழிபட்டு தான் எனது வேலையை தொடங்குவேன் என தெரிவித்தார். மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்று பூஜை செய்து வருகிறேன். இந்தியாவுக்கு வரும் ட்ரம்பை நான் சந்திக்க வேண்டும் அதற்காக மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இவரை அனைவரும் ட்ரம்ப் கிருஷ்ணா என்று தான் அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…