ஆந்திராவில் மதுக்கடைகள் இன்று முதல் ( திங்கட்கிழமை )திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .ஆனால் மதுபானம் மீதான தடை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் .அதில் அவர் கூறியதாவது மாநிலத்தின் வருவாய்யை அதிகரிக்க மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளோம் .நாளை முதல் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார் .
ஆனால் அதே வேளையில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகள் மிகுந்த வேதனை அளிக்கிறது .இதன் மீது முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் .எனவே அதற்கு தடை வரி விதிக்க முடிவு செய்துள்ளோம் அதற்கான தொகை பற்றிய அறியவிப்பு விரைவில் வரும் என்றார் .
ஆந்திர அரசாங்கம் நீண்ட கால பூரண மது ஒழிப்பில் உறுதியாக உள்ளோம் என்றும் இன்று முதல் ( திங்கட்கிழமை ) அனைத்து கடைகளும் திறக்கப்படும். அதே வேளையில் ஊரடங்கில் தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் செயல்படாது என்றும் மால்களில் உள்ள மதுபானக்கடைகள் செயல்படாது .மாநிலத்தில் சுமார் 3,500 கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார் .
அதே வேளையில் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் .இதை மீறும் கடைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவித்தார் .
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…