இது நாட்டிற்கு சோகமான தருணம் – ராகுல் காந்தி

Default Image

குரூப் கேப்டன் வருண் சிங்கின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என ராகுல் காந்தி ட்வீட்.

நீலகிரி மாவட்டம் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வருணசிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி அவர்கள்  பக்கத்தில், ‘குரூப் கேப்டன் வருண் சிங்கின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இது நாட்டுக்கு சோகமான தருணம். இந்த துயரத்தில் நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army