தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்களை இந்த அரசு கொல்கிறது- மெகபூபா முப்தி..!

Published by
murugan

தற்போதைய ஆட்சியில் தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்கள் கொள்ளப்படுகின்றனர் என மெகபூபா முப்தி கூறினார்.

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் ஹைட்ரபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. ஹைதர்போரா பகுதியில் நடந்த என்கவுன்டரில், பாகிஸ்தானிய பயங்கரவாதியான ஹைதர் மற்றும் அவனது உள்ளூர் கூட்டாளி முகமது அமிர் கொல்லப்பட்டனர்.

மேலும், அல்தாப் பட் மற்றும் முடாசிர் குல் ஆகிய இரு பொதுமக்களுடன் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்  தலைவருமான மெகபூபா முப்தி பொதுமக்கள் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி இன்று  போராட்டம் நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலுக்கு வந்ததில் இருந்து, இப்பகுதியில் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு எந்த பொறுப்பும் இல்லை என்று கூறினார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

தற்போதைய ஆட்சியில் தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்களை கொன்றதால் தான் போராட்டம் நடத்துவதாக தலைவர் கூறினார். தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்களா..? என்பது யாருக்கும் தெரியாது. அண்மையில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களின் கோரிக்கையை மீறி இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அரசாங்கம் மறுக்கிறது என்று முஃப்தி கூறினார்.

Published by
murugan

Recent Posts

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

7 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

23 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

26 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

33 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

38 mins ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

15 hours ago